கவர்னரோடு சண்டையிடுவதே நாராயணசாமிக்கு வாடிக்கை: கவர்னர் தமிழிசை காட்டம்
- நாராயணசாமி கூறுவதுபோல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.
- அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் கவர்னரோடு சண்டைபோடவே விரும்புகிறார்.
ஏற்கனவே இருந்த கவர்னரோடும் சண்டையிட்டுள்ளார். இப்போது என்னோடும் சண்டை போடுகிறார். அவருக்கு கவர்னர் என்றாலே பிடிக்கவில்லை.
அவர் முதலமைச்சராக இருந்தபோது தவறாக மொழி பெயர்த்தது போல நான் எதுவும் செய்யவில்லை. அவர் கூறுவது போல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.
அவர்கள் பெண்களுக்கு எவ்வளவு வாய்ப்பு தந்தார்கள்? அவர் ஆட்சிக்காலத்தில் பட்டியலின பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அமைச்சராக வாய்ப்பு தரவில்லை. இந்த விஷயத்தில் அவர் பேசுவதற்கே உரிமை இல்லை.
அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கூட இதுபோல முக்கிய துறைகள் பெண் அமைச்சர்களுக்கு வழங்கப்படவில்லை. இதைப்பற்றி தெரியாமல் கனிமொழி எம்.பி. பேசி வருகிறார்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.