புதுச்சேரி

கோப்பு படம்.

வாகனங்களில் வியாபாரம் செய்வதை அரசு ஊக்குவிக்க வேண்டும்

Published On 2023-05-13 13:32 IST   |   Update On 2023-05-13 13:32:00 IST
  • ஏ.ஐ.சி.சி.டி.யு. வலியுறுத்தல்
  • உரிமம் வழங்கி, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் பாதுகாத்திட வேண்டும்

 புதுச்சேரி:

புதுவை உடல் உழைப்பு சங்கம் ஏ.ஐ.சி.சி.டி.யு பொதுசெயலாளர் விஜயா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை முழுவதும் உள்ள நிலையான அங்காடி வணிகர்கள் நகரம் முழுவதும் நகரும் வாகனங்களில் வணிகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என கோருவது துரதஷ்டவசமானது.

நகராட்சி அங்காடிகளில் போதுமான இடம் கிடைக்கா தோர், தங்கள் வாழ்வாதார த்திற்காக நகரும் வாகனங்கள் மூலம் சிறு வணிகம் செய்து வருவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். அதற்கு தடை விதிக்க கூடாது.

அவ்வாறு வணிகத்தில் ஈடுபடும் அனைவருக்கும், உரிமம் வழங்கி, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்கள் பாதுகாத்திட வேண்டும்

இவ்வாறு விஜயா அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News