புதுச்சேரி

கொள்ளையன் ஜெபசேகர்.

பிரபல சென்னை கொள்ளையன் கைது

Published On 2023-04-26 14:09 IST   |   Update On 2023-04-26 14:09:00 IST
  • ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்தார்.
  • போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த ஜெபசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி:

கோட்டகுப்பம் பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

கோட்டகுப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு கூட்டுக் கொள்ளை சம்பவம் நடந்தது. வழக்கில் மூன்று பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் கூட்டு கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்குளத்தூர் நேரு நகரை சேர்ந்த அருள்ராஜ் மகன் ஜெபசேகர் வயது 40 திண்டிவனத்தில் நடந்து வரும் வழக்கில் ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திண்டிவனம் நீதிமன்ற உத்தரவின் பெரில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த ஜெபசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News