புதுச்சேரி

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில்  எக்கோ கார்டியோகிராம் எந்திரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எக்கோ கார்டியோகிராம் எந்திரம்

Published On 2023-08-05 09:03 GMT   |   Update On 2023-08-05 09:03 GMT
  • இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.
  • டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நிரவியில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவ செயல் இயக்குனராக உதய்பாஸ்வான் கடந்த 1-ந் தேதி பதவியேற்றுகொண்டார். தொடர்ந்து, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், எக்கோ கார்டியோகிராம் எந்திரம் போதுமானதாக இல்லை யென்பதை அறிந்து, ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எக்கோ கார்டியோகிராம் எந்திரம் ஒன்று புதியதாக நிறுவப்பட்டது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.

மேலும், ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் வகையில் தனிஅறை அமைக்கப்பட்டு அதையும் கலெக்டர் குலோத்துங்கன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர். மதன்பாபு, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News