search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Department"

    • இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.
    • டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவியில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவ செயல் இயக்குனராக உதய்பாஸ்வான் கடந்த 1-ந் தேதி பதவியேற்றுகொண்டார். தொடர்ந்து, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், எக்கோ கார்டியோகிராம் எந்திரம் போதுமானதாக இல்லை யென்பதை அறிந்து, ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எக்கோ கார்டியோகிராம் எந்திரம் ஒன்று புதியதாக நிறுவப்பட்டது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமைதாங்கி திறந்து வைத்தார்.

    மேலும், ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயன்பெறும் வகையில் தனிஅறை அமைக்கப்பட்டு அதையும் கலெக்டர் குலோத்துங்கன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர். மதன்பாபு, மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர்.சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    • முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • தஞ்சாவூர் மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் படை வீரர்கள் தங்களது பிள்ளைகளை ராணுவ பணிக்கு அனுப்பினால் தொகுப்பு நிதியிலிருந்து ராணுவ பணி பயிற்சி காலத்தின் போது ஏற்படும் செலவினங்களுக்கு தொகுப்பு மானியமாக கீழ்க்கண்ட வகையில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

    முப்படையில் நிரந்தர படை த்துறை அலுவலர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் (NDA/ IMA/Naval/Air force academy) சேர்ந்து பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.1லட்சம் , முப்படையில் குறுகிய காலப் பணித்துறை அலுவலர் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.50 ஆயிரம், ராணுவத்தில் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதரப் பதவிகளின் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வரும் முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் 1-4-2005 முதல் நடைமுறையில் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்ட த்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது குழந்தைகளை படைப்பணியில் சேர்த்திருப்பின் தஞ்சாவூர் மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×