புதுச்சேரி
மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
- வருகிற 31-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், விழா குழுவினரும்,கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
அதனை முன்னிட்டு அங்குள்ள மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.வருகிற 31-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நடைபெறுகிறது. முன்னதாக தேரோட்டம் நடைபெறுகிறது.
மறு நாள் ஜூன் 3-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், விழா குழுவினரும்,கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.