புதுச்சேரி

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த உசேன்.

காலாப்பட்டு சிறையில் கைதிகள் மோதல்- 2 பேர் படுகாயம் போலீசார் விசாரணை

Published On 2023-09-30 05:07 GMT   |   Update On 2023-09-30 05:07 GMT
  • இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
  • கைதிகளுக்கு இடையேயான மோதலுக்கு என்னகாரணம் என விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கைதிகள் 2 பேருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

அப்போது இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அவர்களை அங்கிருந்த சக கைதிகள் மற்றும் வார்டன்கள் விலக்கிவிட்டனர்.

இந்த மோதலில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை சிறை வார்டன்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

விசாரணையில் மோதி கொண்ட கைதிகள் முத்தியால்பேட்டையை சேர்ந்த உசேன் மற்றும் பிரதீஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதிகளுக்கு இடையேயான மோதலுக்கு என்னகாரணம் என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News