புதுச்சேரி

குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினர் முற்றுகையிட்ட காட்சி.

குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முற்றுகை

Published On 2022-07-28 15:10 IST   |   Update On 2022-07-28 15:10:00 IST
  • சமூக அமைப்புகளின் சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
  • போராட்டத்துக்கு அமைப்பினர் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார்.

புதுச்சேரி;

மனித உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு அமைப்பினர் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் லெனின், பஷீர், பெருமாள், சுவாமிநாதன், லோகு அய்யப்பன், தீனா, அழகர், பிரகாஷ், சாந்தகுமார், பழனி, மருதநாயகம், அய்யாக் கண்ணு, தமிழ்செல்வன், சிவசந்திரன், ராமு, இளமுருகு, கோபிநாதன், சிவக்குமார், குணபூசனம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முத்தியால்பேட்டை சோலை நகரில் இருந்து 9டன் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் பிடிபட்டுள்ளனர். இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியை கடத்தியதில் பலர் உட ந்தையாக இருந்துள்ளனர்.

எனவே ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News