- அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
- செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. கடல் அரிப்பு இயற்கை நிகழ்வு.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை தலைமை செயலகம் எதிரில் செயற்கை கடல் மணல்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்கரை சாலை டூப்ளே சிலை அருகே அருகே கடலில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் சிறிதளவு கடல் அரிப்பு இருக்கும். இந்த ஆண்டு அதிக கடல் அரிப்பு உள்ளது.
இதுகுறித்து கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்து ஆய்வு செய்ய கூறியுள்ளோம். செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. கடல் அரிப்பு இயற்கை நிகழ்வு.
ஒரு இடத்தில் மணல் எடுத்தால் அடுத்த இடத்தில் சேரும். இடிந்து விழுந்த பழைய துறைமுக பாலம் முழுவதுமாக இடத்து கப்பல் வருகை, சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய துறைமுகத்துறை இத்திட்டத்துக்கு நிதி தர ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.