புதுச்சேரி
புதுச்சேரியில் தரை தட்டிய சரக்கு கப்பல்
- புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றுவதற்காக சென்னையில் இருந்து ஒரு கப்பல் புதுச்சேரி வந்தது.
- திடீரென நீர்மட்டம் குறைந்ததால் எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டி நின்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து கன்டெய்னர்களை ஏற்றுவதற்காக நேற்று சென்னையில் இருந்து ஒரு கப்பல் புதுச்சேரி வந்தது. துறைமுக முகத்துவார பகுதியில் இருந்து துறைமுகத்தின் உள்ளே இழுவை படகுகள் மூலமாக சரக்கு கப்பல் இழுத்துச்செல்லப்பட்டது. அப்போது திடீரென நீர்மட்டம் குறைந்ததால் எதிர்பாராத விதமாக கப்பல் தரை தட்டி நின்றது.
எனவே கப்பலை துறைமுகத்திற்கு இழுத்துச்செல்லும் பணி நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் உயர்ந்த பின்னர் கப்பலை துறைமுகத்திற்குள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.