புதுச்சேரி

இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவகுமார் தலைமையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்ட அணி சார்பில்சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு பாராட்டு

Published On 2023-04-02 04:28 GMT   |   Update On 2023-04-02 04:28 GMT
  • கூட்டத்தொடரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பான முறையில் கையாண்ட தாக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.
  • திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி அனைவருக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தொடரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பான முறையில் கையாண்ட தாக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

மேலும் முதல்-அமைச்சர், அமைச்சர்களுடன் இணைந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவருடனும் இணக்க மான முறையில் புதுவை மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக விவாதங்கள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி அனைவருக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவகுமார் தலைமையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News