search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Empbalam Selvam"

    • பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் கண்டிக்கத்த க்கது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் கருத்து கூறியிருந்தார்.

    புதுச்சேரி:

    அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்த விவகாரம் புதுவை அரசியலில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சாதிரீதியாகவும், பாலினரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதை உணர்ந்ததால் ராஜினாமா செய்வதாக சந்திர பிரியங்கா கூறியிருந்தார்.

    இதற்கிடையே போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் கண்டிக்கத்த க்கது என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சபாநாயகர் கருத்து கூறியிருந்தார்.

    இந்த நிலையில் ஜி.20 உறுப்பு நாடுகளின் பாராளு மன்ற சபாநாயகர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பின் பேரில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார்.

    இந்த மாநாடு முடிந்ததும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சந்திர பிரியங்கா விவகாரம் குறித்து பேசுவார் என தெரிகிறது.

    • கூட்டத்தொடரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பான முறையில் கையாண்ட தாக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.
    • திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி அனைவருக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தொடரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பான முறையில் கையாண்ட தாக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி பாராட்டு தெரிவித்துள்ளது.

    மேலும் முதல்-அமைச்சர், அமைச்சர்களுடன் இணைந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவருடனும் இணக்க மான முறையில் புதுவை மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக விவாதங்கள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி அனைவருக்கும் இணைப்பு பாலமாக செயல்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் என்ஜினீயர் சிவகுமார் தலைமையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்து சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • புதுவை அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
    • இனிப்புப்பெட்டிகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளை சுற்றிய பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளெக்ஸ் பேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது:-

    புதுவை அரசு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தூக்கு கூபைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள், விரிப்பான்கள், தெர்மாக்கோல் குவளைகள், தெர்மாக்கோல் தட்டுகள், உணவுப் பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய் மற்றும் ஐஸ்கிரீம், தெர்மாக்கோல் அலங்காரப்பொருட்கள், பிளாஸ்டிக் முட்கரண்டி, சிறிய பேக்கேஜிங் போர்த்திய தாள்கள், இனிப்புப்பெட்டிகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளை சுற்றிய பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளெக்ஸ் பேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

    ஆகையால் புதுவையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு சட்டப்பேரவை அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 14 வகையான பொருட்களை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் மே 1-ந் தேதி முதல் பயன்படுத்தக்கூடாது. எம்.எல்.ஏ.க்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தேசிய அளவிலான நடன விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது.
    • புதுவை டான்ஸ் ஸ்போர்ட் சங்க நிறுவனர் வினோத் தலைமையில் சங்க பொதுச் செயலாளர் ஜெகன் முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்தனர். அவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி நடன மாணவ-மாணவிகளை வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    இந்திய தேசிய அளவிலான நடன விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது.

    இதில் தேர்தேடுக்கப்பட்ட புதுவை நடன மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட னர். இப்போட்டியில் பிரிஸ்டைல் மற்றும் சால்சா பிரிவில் தனிஷ், கார்த்திகா, எரின் ரிச்சல் ஆகியோர் தங்க பதக்கமும், சோனாக்ஷி வெள்ளிபதக்கமும், லிசி, துர்கா, தேவி, பாவித்ரா, காயத்ரி வெண்கலபதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.

    இவர்கள் அனைவரும் புதுவை டான்ஸ் ஸ்போர்ட் சங்க நிறுவனர் வினோத் தலைமையில் சங்க பொதுச் செயலாளர் ஜெகன் முன்னிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தை சந்தித்தனர். அவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி நடன மாணவ-மாணவிகளை வாழ்த்தினார்.

    இதில் பயிற்சியாளர்கள் செந்தில், கொவிந், ஜான்சன், சங்க நிர்வாகிகள் செல்வம், சோமசுந்தரம், ஜெயஸ்டூ, மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர். இதற்கான ஏற்பாட்டினை பொருளாளர் சிலம்பரசன் செய்திருந்தார்.

    ×