புதுச்சேரி

 பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா நடந்த காட்சி.

பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில்தேசிய மாணவர் படை தொடக்க விழா

Published On 2023-08-27 16:24 IST   |   Update On 2023-08-27 16:24:00 IST
  • அகரத்தில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மே ல்நிலை ப்பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடக்க விழா நடந்தது
  • விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

அகரத்தில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மே ல்நிலை ப்பள்ளியில்

தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடக்க விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன், முதல்வர் சாந்தி ஜெயசுந்தர்

ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக விங் காமாண்டர் சாகர் துபராக், இளநிலை அதிகாரி சிவகுமார் ஆகியோர் க லந்து கொண்டு தேசிய மாணவர் படைபெயர் பலகையை திறந்து வைத்தனர். மேலும் தேசிய மாணவர் படையின் சிறப்புகள், நன்மைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.

மேலும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Similar News