புதுச்சேரி

கோப்பு படம்.

அங்கன்வாடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-06-11 05:48 GMT   |   Update On 2023-06-11 05:48 GMT
  • நோய் குணமாகவில்லை. இதனால் குப்பம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
  • மனைவி தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புதுச்சேரி:

புதுவை உழவர்கரை 4 வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 51) இவர் புதுவை மரியாள் நகரில் உள்ள அங்கவாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு காயத்திரி என்ற மகள் உள்ளார். இவர் புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

குப்பம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் குப்பம்மாள் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த குப்பம்மாள் வீட்டின் மாடியில் மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய சரவணன் மனைவியை காணாததால் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது மனைவி தூக்கில் தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்பம்மாளை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்பம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News