புதுச்சேரி
கோப்பு படம்.

மதுபாட்டில்களை கடத்த முயன்ற வாலிபர் கைது

Published On 2023-05-24 14:05 IST   |   Update On 2023-05-24 14:05:00 IST
  • உருளையன்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் புதுவை புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அப்போது பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் பையுடன் நின்றிருந்தார்.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் புதுவை புதிய பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் பையுடன் நின்றிருந்தார். அவர் வைத்தி ருந்த பையை போலீசார் சோதனையிட்ட போது, அதில் 10 முழு மதுபாட்டில் கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 ஆயிரத்து 580 ஆகும்.

விசாரணையில் அவர் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பதும், இந்த மதுபானத்தை சென்னைக்கு கடத்திச்சென்று அவர் விற்பனை செய்ய பஸ்சுக்காக காத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கலால் துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News