புதுச்சேரி

ஹரிகரன்

பைக் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-04-24 09:27 GMT   |   Update On 2023-04-24 09:27 GMT
  • பைக்கில் புதுவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

கடலூர் மஞ்சக்கு ப்பத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 24) இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து விட்டு தற்சமயம் டெக்கரேஷன் வேலை செய்து வருகிறார் இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான சுந்தராஜுலு (வயது 25) ஆகியோர் பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அரியாங்குப்பம் புதிய பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பேரிகேட் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஹரிகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தராஜுலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஹரிஹரன் கண்களை அவரது பெற்றோர் தானம் செய்தனர்.

விபத்து சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News