கிறிஸ்தவர்களுக்கு கல்லறை இடம் ஒதுக்க வேண்டும்
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கல்லறைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
- குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு அவர்களுக்கென்று தனியாக எந்த இடமும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.
புதுச்சேரி:
உழவர்கரை, மூலக்குளம், எம்.ஜி.ஆர் நகர், பிச்சாவீராம்பட்டு, தக்ககுட்டை, அரும்பார்த்தபுரம், ஒதியம்பட்டு, ஜெ.ஜெ. நகரை சுற்றியுள்ள இடங்களில் கிறிஸ்தவ சமுதாய பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு அவர்களுக்கென்று தனியாக எந்த இடமும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.
தக்ககுட்டை என்கிற இடத்திற்கு பின்புறம் ஒரு இடம் உள்ளதை அறிந்த அவர்கள் இது குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் அவர்கள் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கல்லறைக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரையை மனுவின் வாயிலாக கோரிக்கை வைத்தார்.
அவருடன் சிவசங்கர் எம்.எல்.ஏ, அந்தோணி தாஸ், ஜோசப், எட்வின், மணிகண்டன், டேவிட், செல்வகுமார் ஆகியோர் சென்றனர்.