ராஜ்பவன் தொகுதி தொழிலதிபர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த காட்சி.
காங்கிரசில் இணைந்த ராஜ்பவன் தொகுதி தொழிலதிபர்
- காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
- தொகுதி நிர்வாகிகள் செந்தில், முத்து, சார்லஸ், ஜோசப் சகாயம், ஆல்பர்ட் கிஷோர், மஞ்சினி, கோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ராஜ்பவன் தொகுதி குமரகுரு பள்ளத்தை சார்ந்த தொழிலதிபர் நடராஜன் மற்றும் அவருடைய மனைவி யும், சமூக சேவகியுமான எழிலரசியும் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடந்தது.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், வைத்தியலிங்கம் எம்.பி, வைத்திய நாதன் எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலை வரும் ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளருமான மருதுபாண்டியன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு, மாநில நிர்வாகிகள் திரு முருகன், பிரதீஷ், பாபுலால் உருளையன்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், முத்தியால் பேட்டை வட்டார தலைவர் ஆனந்த் பாபு, வக்கீல்கள் ராமலிங்கம், பாலமுருகன், சாரதி, கார்த்திகேயன், ஜார்ஜ் மற்றும் ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் செந்தில், முத்து, சார்லஸ், ஜோசப் சகாயம், ஆல்பர்ட் கிஷோர், மஞ்சினி, கோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.