புதுச்சேரி
4 ஆண்டு பி.எட். படிப்புக்கு விண்ணப்பம்
- பி.ஏ பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.பி.எட். ஒருங்கிணைந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.
புதுச்சேரி::
புதுவை பல்கலைக் கழகத்தில் இந்த கல்வியாண்டில் பி.ஏ பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.பி.எட். ஒருங்கிணைந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 19-ந் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்பில் சேர கல்வித்தகுதி விபரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.