கல்லூரி முதல்வர் விஜய கிருஷ்ண ரபாகா தலைமை தாங்கிய காட்சி.
2 நாள் தொழிழ்நுட்ப கருத்தரங்கம்
- மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் கம்யூனி கேஷன் துறை தலைவர் ஷோபா வரவேற்றார்.
- மத்திய அரசின் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரா னிக் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் துறை சார்பாக டெக்னோ ஸ்பார்க் 2023 பெயரில் தொழில்நுட்ப சிம்போசியம் எனும் கருத்தரங்கம் கடந்த 4, 5-ந் தேதி நடைபெற்றது.
தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜய கிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.
துணை முதல்வர் ஐயப்பன் சிறப்புரை ஆற்றினார். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் கம்யூனி கேஷன் துறை தலைவர் ஷோபா வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து இரு நாட்களாக நடைபெற்ற பல்வேறு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்நுட்பம் அல்லாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு நாளான நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினார். மேலும் மத்திய அரசின் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். பின்னர் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் இந்திய எம்.யூ.என்.எஸ்.எஸ். எனப்படும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பத்மநாபன் மற்றும் ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு இடையே பரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
நிகழ்ச்சியில் பொறியியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் துறை தலைவர் பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.