புதுச்சேரி

100 நாள் வேலையை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளனர்.

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.290 ஆக உயர்வு

Published On 2023-05-11 14:13 IST   |   Update On 2023-05-11 14:13:00 IST
  • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் அறிவிப்பு
  • ரூ.290 வழங்கப்படும் என அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.

புதுச்சேரி:

புதுவை ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்ட பெரிய ஏரி ஆழப்படுத்துதல், பிள்ளையார்குப்பம் பெரிய ஏரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (100 நாள் வேலை) ரூ 1 கோடியே 3 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள்  தொடங்கப்பட்டது.

 இந்தப் பணியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி காந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுவை மாநிலத்தில் ஏற்கனவே நடந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஒரு நாள் ஊதியமாக ரூ 200, 220, 245 ஆகியவை வழங்கப்பட்டு வந்தது.

இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததின் பேரில் ஏம்பலம் தொகுதியில் இன்று தொடங்கப்பட்ட 100 நாள் வேலை செய்யபவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் ரூ 290 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இனி 100 நாள் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ 290 வழங்கப்படும் என அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.

இந்த பணி தொடக்கத்தின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திர குமரன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பணி ஆய்வாளர் குப்புராமன், உத்திரவேலு, நந்தகோபால் கிராமத் திட்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.'

Tags:    

Similar News