செய்திகள்
திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை
இன்று (21-ந்தேதி) இரவு 7.19 மணி முதல் நாளை (22-ந்தேதி) மாலை 6.17 மணி வரை பவுர்ணமி காலமாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை
கொரோனா பரவியதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு மாறாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (21-ந்தேதி) இரவு 7.19 மணி முதல் நாளை (22-ந்தேதி) மாலை 6.17 மணி வரை பவுர்ணமி காலமாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்றும் நாளையும் அனுமதி கிடையாது.
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது முக்கிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 22-ந்தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. எனவே பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற வேண்டாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். அதன் மூலம் பெரிய அளவில் வணிகம் நடைபெறும்.
மேலும் ரெயில், பஸ், சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து மூலம் அந்த துறைகளுக்கும் கணிசமாக வருமானம் கிடைக்கும். அதுமட்டுமின்றி சிறு வியாபாரிகள் பலனடைந்து வந்தனர்.
கொரோனா பரவியதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது.
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதற்கு மாறாக இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (21-ந்தேதி) இரவு 7.19 மணி முதல் நாளை (22-ந்தேதி) மாலை 6.17 மணி வரை பவுர்ணமி காலமாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்றும் நாளையும் அனுமதி கிடையாது.
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது முக்கிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வருகிற 22-ந்தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. எனவே பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற வேண்டாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள். அதன் மூலம் பெரிய அளவில் வணிகம் நடைபெறும்.
மேலும் ரெயில், பஸ், சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து மூலம் அந்த துறைகளுக்கும் கணிசமாக வருமானம் கிடைக்கும். அதுமட்டுமின்றி சிறு வியாபாரிகள் பலனடைந்து வந்தனர்.
பவுர்ணமி கிரிவல தடையால் அவர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க.. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்