என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்
Byமாலை மலர்21 Aug 2021 8:54 AM GMT (Updated: 21 Aug 2021 8:54 AM GMT)
உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை, சம்பங்கி, துளசி ஆகியவை உள்பட பல வண்ணமலர்களால் 9 வகையான அலங்காரம் செய்யப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று வரலட்சுமி விரத பூஜை நடந்தது. கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாரை வைத்து, விஷ்வசேனர் வழிபாடு நடத்தி வரலட்சுமி விரத பூஜை தொங்கியது. அதைத்தொடர்ந்து புண்யாவதனம், கலச ஸ்தாபனம், ஆராதனை, லட்சுமி சஹஸ்ர நாமார்ச்சனை, அஷ்டோத்ர சத நாமாவளி ஆகியவை நடந்தது.
உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை, சம்பங்கி, துளசி ஆகியவை உள்பட பல வண்ணமலர்களால் 9 வகையான அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அலங்காரமும் ஒவ்வொரு தெய்வத்தின் அடையாளமாக இருந்தன. அப்போது ஆகம வேதப் பண்டிதர்கள், வரலட்சுமி விரதத்தின் மகிமை, பக்தர்கள் வழிபட வேண்டிய முறையை பற்றி விளக்கினார்கள்.
பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு 12 வகையான பிரசாதம், 5 வகையான நைவேத்தியம் செய்யப்பட்டது. உற்சவர் மற்றும் மூலவருக்கு மகா மங்கள ஆரத்தி நடந்தது. அத்துடன் வரலட்சுமி விரத பூஜை நிறைவடைந்தது. வரலட்சுமி விரத பூைஜ நிகழ்ச்சிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது.
உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி, தாமரை, சம்பங்கி, துளசி ஆகியவை உள்பட பல வண்ணமலர்களால் 9 வகையான அலங்காரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு அலங்காரமும் ஒவ்வொரு தெய்வத்தின் அடையாளமாக இருந்தன. அப்போது ஆகம வேதப் பண்டிதர்கள், வரலட்சுமி விரதத்தின் மகிமை, பக்தர்கள் வழிபட வேண்டிய முறையை பற்றி விளக்கினார்கள்.
பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு 12 வகையான பிரசாதம், 5 வகையான நைவேத்தியம் செய்யப்பட்டது. உற்சவர் மற்றும் மூலவருக்கு மகா மங்கள ஆரத்தி நடந்தது. அத்துடன் வரலட்சுமி விரத பூஜை நிறைவடைந்தது. வரலட்சுமி விரத பூைஜ நிகழ்ச்சிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, மாநில மந்திரி வேணுகோபால்கிருஷ்ணா, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க...எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்யங்கிரா தேவி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X