search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரத்யங்கிரா தேவி
    X
    பிரத்யங்கிரா தேவி

    எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்யங்கிரா தேவி

    பிரத்யங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி.
    பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமத்தை சொன்னாலே நிவாரணம் கிடைத்துவிடும். சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். பிரத்யங்கிரா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும், எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள். இந்து தொன்மவியலின் படி பிரத்யங்கிரா தேவி விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். பிரத்யங்கிரா தேவியை மனதார வேண்டி, தரிசித்து வந்தாலே நம் எதிர்ப்புகள் அனைத்தும் துரத்தியருள்வாள். எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.

    பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்க செய்வாள் என்பதும் ஐதீகம். ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள்.

    பிரத்யங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி. பிரத்யங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையே உருவாகி அருள்பாலிப்பவள். தொடர்ந்து தேவியை வழிபடுங்கள். தடைகள் அனைத்தும் தகர்த்து, முன்னேற்றப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அருளுவாள் பிரத்யங்கிரா தேவி.

    Next Story
    ×