செய்திகள்
டு பிளிசிஸ்

ஆஸி.யை நாங்கள் வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும்: தென்ஆப்பிரிக்கா கேப்டன்

Published On 2019-07-07 14:34 GMT   |   Update On 2019-07-07 14:34 GMT
ஆஸ்திரேலியாவை நாங்கள் வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும் என தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பைக்கான லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று இந்தியா - இலங்கை, தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டங்கள் நடைபெற்றன.

தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுவதை தவிர்த்து, நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலை இருந்தது.

அதேபோல் தென்ஆப்பிரிக்கா 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்தது. இதனால் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா சந்தோசம் அடைந்திருக்கும் என தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் இந்தியா நிச்சயம் சந்தோசம் அடைந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், நியூசிலாந்து கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News