செய்திகள்

உலகக்கோப்பையுடன் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடியாது: கிறிஸ் கெய்ல்

Published On 2019-06-26 13:58 GMT   |   Update On 2019-06-26 13:58 GMT
உலகக்கோப்பை தொடர்தான் என்னுடைய கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும் என்று கூறியிருந்த கிறிஸ் கெய்ல், அதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளார். உலகக்கோப்பை தொடர் உடன் என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வராது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘என்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிவிற்கு வரவில்லை. நான் இன்னும் சில போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. இன்னும் ஒரு தொடரில் விளையாட வாய்ப்புள்ளது. யாருக்த் தெரியும். என்ன நடக்க இருக்கிறது என்பதை நாம் பார்ப்போம்.



உலகக்கோப்பை தொடருக்குப்பின் என்னுடைய திட்டம் என்ன என்று கேட்கிறீர்கள். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஒருவேளை விளையாடலாம், அப்புறம் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கட்டாயம் விளையாடுவேன். டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடமாட்டேன். உலகக்கோப்பை தொடருக்குப்பின் என்னுடயை திட்டம் இதுதான்’’ என்றார்.
Tags:    

Similar News