உலகம்

இந்தியா மீது இரண்டாம் கட்ட வரி.. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

Published On 2025-08-14 21:10 IST   |   Update On 2025-08-14 21:10:00 IST
  • நாளை அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
  • பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரை ஆதரிக்கும் விதமாக ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், இந்தியாவின் மீதான வரிகள் அதிகரிக்கப்படலாம் என்று  எச்சரித்துள்ளார்.

ரஷிய அதிபர் புதின் நாளை அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் உக்ரைன் போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர்  புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமையாவிட்டால், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

புளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு பெசென்ட் அளித்த பேட்டியில், ரஷியாவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால், வரி அதிகரிக்கப்படலாம்.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது இரண்டாம் கட்ட வரிகள் மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

Similar News