உலகம்

ஆன்டனி பிளிங்கன்

என்.ஜி.ஓ. நிறுவனங்களில் பெண்கள் பணிபுரிய தடை - தலிபான்களுக்கு அமெரிக்கா கண்டனம்

Published On 2022-12-25 11:41 GMT   |   Update On 2022-12-25 11:41 GMT
  • ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

வாஷிங்டன்:

தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு, உள்நாட்டு அரசுசாரா நிறுவனங்களும் (என்ஜிஓ) பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என தலிபான் அரசாங்கம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. எந்த ஒரு என்.ஜி.ஓ. நிறுவனமாக இருந்தாலும் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் ஆப்கானிஸ்தானில் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என பொருளாதாரத்துறை மந்திரி காரி தின் முகமது ஹனீப் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், என்.ஜி.ஓ. நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தடை விதித்த தலிபான் உத்தரவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்கள் மையமாக உள்ளனர். இந்த முடிவு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

மேலும் இந்த தடையானது மில்லியன் கணக்கான மக்களின் உயிர்காக்கும் உதவியை சீர்குலைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News