உலகம்

அதிபர் புதின்

உக்ரைனின் மரியுபோல் நகருக்குள் முதல் முறையாக சென்ற ரஷிய அதிபர் புதின்

Published On 2023-03-19 17:58 GMT   |   Update On 2023-03-19 17:58 GMT
  • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டைக் கடந்துள்ளது.
  • உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷிய அதிபர் புதின் சென்றார்.

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இதற்கிடையே, இந்தப் போரில் கிழக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதல் முறையாக உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார்.

மரியுபோல் நகரை ரஷிய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அதிபர் புதினின் இந்த பயணம் உக்ரைன் - ரஷியா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags:    

Similar News