உலகம்

சோயாபீன்ஸ் விவகாரம்: சீன அதிபரை 4 வாரங்களில் சந்திப்பேன்- டிரம்ப்

Published On 2025-10-02 09:17 IST   |   Update On 2025-10-02 09:17:00 IST
  • நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன்.
  • சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சோயாபீன்சை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. அமெரிக்காவை பொறுத்தவரை சீனாவின் சோயாபீன்சுகளை வாங்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

சீனா சோயாபீன்ஸ் ஏற்றுமதியை நிறுத்தியதால் அமெரிக்காவில் சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் டிரம்ப் இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க இருக்கிறார். இது தொடர்பாக டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

நம் நாட்டில் சோயாபீன்ஸ் வாங்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயாபீன்ஸ் வாங்குவதில்லை. நாம் வரிகள் மூலம் நிறைய சம்பாதித்து விட்டோம். அதில் கொஞ்சம் எடுத்து விவசாயிகளுக்கு உதவுவோம். நான் ஒரு போதும் நமது விவசாயிகளுக்கு பாதிப்பு உருவாக சம்மதிக்க மாட்டேன். சீனாவுடன் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான பண்ணைப்பொருட்கள் ஒப்பந்தத்தை ஜோ பைடன் மேற்கொள்ளவில்லை. நான் நமது தேசபக்தர்களையும், விவசாயிகளையும் நேசிக்கிறேன்.

சீன அதிபர் ஜி ஜின் பிங்கை அடுத்த 4 வாரங்களில் நான் சந்திக்கவுள்ளேன். இந்த சந்திப்பில் சோயாபீன்ஸ் தான் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News