உலகம்

பூங்காவில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

Published On 2023-09-08 12:27 IST   |   Update On 2023-09-08 12:27:00 IST
  • பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே இது போன்று நடந்து கொண்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
  • பிரான்சிஸ்கோ மார்லெட் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

மேரிலேண்ட்:

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பிரான்சிஸ்கோ மார்லெட் என்ற போலீஸ் அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் போலீஸ் வாகனம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணுக்கு திடீரென முத்தம் கொடுத்தார். பின்னர் போலீஸ் அதிகாரி அந்த பெண்ணின் தோளில் கை போட்டவாறு, கையை பிடித்துக்கொண்டு அழைத்துச்சென்று போலீஸ்காரை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டனர்.

பொது இடத்தில் போலீஸ் உடையில் அவர் செய்த இந்த முத்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே இது போன்று நடந்து கொண்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிரான்சிஸ்கோ மார்லெட் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News