உலகம்

நைஜீரியாவில் ஜெயில் மீது வெடிகுண்டு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல்- 600 கைதிகள் தப்பி ஓட்டம்

Published On 2022-07-07 08:39 GMT   |   Update On 2022-07-07 11:02 GMT
  • தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
  • ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்.

நைஜீரியா நாட்டு தலைநகர் அபுஜாவில் உள்ள ஜெயில் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயிலின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600-க்கும் மேற்பட்ட கைதிகள் ஜெயிலில் இருந்து தப்பி ஓடினர்.

இந்த தாக்குதலில் ஜெயில் காவலர் ஒருவர் பலியானார். ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை போலீசார் பிடித்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷூஜப் பெல்கோர் கூறும்போது, "அபுஜாவின் குஜேவில் உள்ள சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அவர்கள் போகோஹராம் அமைப்பை சேர்ந்தவர்கள். ஜெயிலில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க தாக்குதலை நடத்தி உள்ளனர்' என்றார்.

Tags:    

Similar News