உலகம்
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்- ஐஎஸ் பயங்கரவாதி அதிரடி கைது
- துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக பயங்கரவாதி தகவல்.
- கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான ஐ.எஸ். பயங்கரவாதி மத்திய ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர் என ரஷிய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதியிடம் நடத்தி விசாரணையில் துருக்கி, இஸ்தான்புல் சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், கைதான பயங்கரவாதிக்கு துருக்கி நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.