உலகம்

கனடாவில் இலங்கையை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் குத்திக்கொலை

Published On 2024-03-08 04:14 GMT   |   Update On 2024-03-08 04:14 GMT
  • தர்ஷினியின் கணவர் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
  • ஒரே நேரத்தில் 6 பேர் அதுவும் 4 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் கனடா நாட்டை உலுக்கி உள்ளது.

ஒட்டாவா:

கனடா தலைநகர் ஒட்டாவா தென்மேற்கு பகுதியான பார்ஹேவன் பகுதியில் வசித்து வந்தவர் தர்ஷினி (வயது35). இலங்கையை சேர்ந்த இவர் தனது கணவர் மற்றும் 7 வயது மகன், 4 மற்றும் 2 வயதுடைய மகள்கள். 2 மாத கைக்குழந்தையுடன் கனடா சென்றார்.

இந்த நிலையில் இவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது அங்கு தர்ஷினி மற்றும் 4 குழந்தைகள், ஒரு ஆண் ஆகிய 6 பேரும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


தர்ஷினியின் கணவர் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயது மாணவர் டி.சொய்டா என்பவரை கைது செய்தனர். அவர் எதற்காக இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடா நாட்டை பொறுத்தவரை இது போன்ற கொலைகள் அரிதாக தான் நடக்கும். தற்போது ஒரே நேரத்தில் 6 பேர் அதுவும் 4 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் கனடா நாட்டை உலுக்கி உள்ளது.

Tags:    

Similar News