உலகம்

மாடி படிக்கட்டில் இருந்து விழுந்ததாக தகவல்... உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த புதின்

Published On 2022-12-06 10:22 GMT   |   Update On 2022-12-06 10:22 GMT
  • புதின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
  • குண்டு வைத்து பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது.

மாஸ்கோ:

ரஷிய அதிபர் புதின், தலைநகர் மாஸ்கோவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தபோது மாடி படிக்கட்டில் இறங்கியபோது தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதின் பொது வெளியில் தோன்றினார்.

கடந்த அக்டோபர் மாதம் ரஷியாவின் கிரீமியா பகுதியில் உள்ள பாலத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்தது. பாலத்தை சீரமைக்கும் பணி விரைந்து நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

கிரீமியா பாலத்தை புதின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பாலத்தில் காரை ஓட்டி சென்றார். பின்னர் பாலத்தின் பழுது பார்ப்பு பணிகள் குறித்த அறிக்கையை துணை பிரதமர் மராட் குஷ்னுலினிடம் கேட்ட புதின், கட்டுமான தொழிலாளர்களிடம் உரையாடினார்.

கிரீமியா பாலத்தை புதின் பார்வையிட்ட காட்சிகள் அரசு தொலைக்காட்சியில் காட்டப்பட்டன.

உக்ரைன் மீதான ரஷியா வின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவுக்குள் இருக்கும் 2 ராணுவ தளங்களை உக்ரைன் ராணு வம் டிரோன் மூலம் தாக்கியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:    

Similar News