உலகம்

ஜப்பானில் பிரதமர் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

Published On 2023-05-06 03:55 GMT   |   Update On 2023-05-06 03:55 GMT
  • தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • பிரதமரின் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டோக்கியோ:

ஜப்பானில் பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தலைநகர் டோக்கியோவில் பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று வழக்கம்போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் துப்பாக்கி சத்தம் கேட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள கழிப்பறை அருகே போலீஸ்காரர் ஒருவர் தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமரின் அலுவலகத்திலேயே போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த சம்பவம் நடந்தபோது பிரதமர் புமியோ கிஷிடா தனது அலுவலகத்தில் இல்லை. அவர் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News