உலகம்

ரஷியாவில் வாக்னர் குழு இல்லை: புதின் பேச்சால் புதிய சர்ச்சை

Published On 2023-07-15 02:19 GMT   |   Update On 2023-07-15 02:19 GMT
  • வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.
  • புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

மாஸ்கோ :

உக்ரைன் மீதான போரில் ரஷிய படைகளுடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு செயல்பட்டு வந்தது. போரில் உக்ரைன் நகரங்களை கைப்பற்றுவதில் இந்த கூலிப்படை முக்கிய பங்காற்றியது.

இந்த சூழலில் திடீர் திருப்பமாக வாக்னர் கூலிப்படை ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. புதினின் அரசை கவிழ்க்க திடீர் புரட்சியில் ஈடுபட்டது.

எனினும் கூலிப்படையுடன் புதின் அரசு சமரசம் செய்து கொண்டதால் இந்த புரட்சி ஓரிரு நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு உறுப்பினர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷியாவின் வாக்னர் குழு இல்லை என்று அதிபர் புதின் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த புதினிடம் வாக்னர் குழு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ரஷியாவில் தனியார் ராணுவ அமைப்புகளுக்கு எந்த சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. எனவே வாக்னர் குழு என்ற அமைப்பு இல்லை" என கூறினார்.

Tags:    

Similar News