உலகம்

அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை: அதிபர் டிரம்ப் கண்டனம்

Published On 2025-06-15 00:18 IST   |   Update On 2025-06-15 00:18:00 IST
  • ஜனநாயக கட்சியின் சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் படுகாயம் அடைந்தார். இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, கவர்னர் டிம்.வால்ஸ் கூறுகையில், மின்னசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்கவேண்டும். தாக்குதல் நடத்தியவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மின்னசோட்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமானது என கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என கூறினார்.

Tags:    

Similar News