உலகம்

ஏமனில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்..!

Published On 2025-05-16 21:37 IST   |   Update On 2025-05-16 21:37:00 IST
  • தாக்குதல் நடத்தப்பட்ட இரண்டு துறைமுகங்களும் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ளது.
  • ஆயுதங்கள் பரிமாற்றிக் கொள்ள துறைமுகங்களை பயன்படுத்தி வந்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மத்திய கிழக்குப் பகுதி சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த நாடு திரும்பிய நிலையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஏமனில் உள்ள இரண்டு துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்திய ஹுதைதா மற்றும் சாலிஃப் ஆகிய இரண்டு துறைமுகங்களும் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றை ஆயுதங்கள் பரிமாற்றம் செய்வதற்கான ஹவுதி பயன்படுத்தி வருகிறது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Tags:    

Similar News