உலகம்
null

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பேசுவதா?- ஐ.நா. கூட்டத்தில் இந்தியா பதிலடி

Published On 2025-10-02 14:17 IST   |   Update On 2025-10-02 14:19:00 IST
  • இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது.
  • சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முயலுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 60-வது கூட்டம் ஜெனிவா நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அடுக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டத்தில் இந்திய தூதர் முகமது ஹூசைன் பேசியதாவது:-

சிறுபான்மையினரை துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் ஒரு நாடு எப்படி மனித உரிமைகள் குறித்து மற்றவர்களுக்கு போதிக்க முயலுகிறது. இதை இந்தியா மிகவும் முரண்பாடாக கருதுகிறது. பாகிஸ்தான் தங்கள் சொந்த மண்ணில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டு தோல்வியை புறக்கணித்து சர்வதேச மன்றங்களை பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு செய்ய மீண்டும், மீண்டும் முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News