உலகம்
பாலஸ்தீன அதிபர் ஐநா சபையில் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
- பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.
- 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.
இந்நிலையில், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை காணொளி மூலம் ஐநா சபையில் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
ஐநா சபையில் பங்கேற்க விடாமல் தடுக்க அவரின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ள நிலையில், இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
முன்னதாக காசாவில் போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைய செய்தது குறிப்பிடத்தக்கது.