லண்டன் முதல் ஜெர்மனி வரை.. அயதுல்லா காமேனி மகனின் ரகசிய சொத்துக்கள் - ப்ளூம்பர்க் அறிக்கை
- அலி அன்சாரி என்ற ஈரானிய வங்கியாளர் பெயரில் பல சொத்துக்கள் அனைத்தும் வாங்கப்பட்டுள்ளது.
- ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி (56), வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்களைக் ரகசியமாக குவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
லண்டனின் மிகவும் விலையுயர்ந்த பகுதியான Bishops Avenue வில் சொகுசு பங்களாக்கள் முதல் ஜெர்மனியின் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரை மோஜ்தபாவின் ரகசிய சொத்துக்கள் பல இடங்களில் பரவியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைபடி, அமெரிக்காவின் தடைகள் அமலில் இருந்தபோதிலும், ஷெல் நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் மூலம் இந்தச் சொத்துக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அலி அன்சாரி என்ற ஈரானிய வங்கியாளர் பெயரில் பல சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது.
2014-ஆம் ஆண்டில் மட்டும் ஒரே ஒரு கட்டிடத்திற்காக சுமார் ரூ. 300 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் பிராங்பேர்ட் மற்றும் ஸ்பெயினின் மல்லோர்கா பகுதிகளில் உள்ள சொகுசு விடுதிகளும் இவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிட்டன் வங்கிகள் வழியாக வெளிநாடுகளுக்கு திருப்பிவிடப்பட்டு இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.
ஈரான் பொருளாதார நெருக்கடியால் அத்தியவிசய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வரும் சூழலில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈ