வங்காளதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு
- பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் நேற்று வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தில் உள்ள குர்மிடோலா என்ற இடத்தில் உள்ள விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சிகிக்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்தது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய வங்காளதேச விமானப்படை, உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.