உலகம்
மியான்மரில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கொல்கத்தாவிலும் உணரப்பட்டது
- மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது.
நேப்பிடாவ்:
மியான்மர் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி மியான்மரில் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்க அதிர்வு கொல்கத்தாவிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.