உலகம்
null

விபத்தில் ஆக்கி வீரர்கள் 16 பேர் பலி- இந்தியரை நாடு கடத்த கோர்ட்டு உத்தரவு

Published On 2024-05-25 06:32 GMT   |   Update On 2024-05-25 10:55 GMT
  • விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்துவை போலீசார் கைது செய்தனர்.
  • விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள டிஸ்டேல் என்ற பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி பஸ்-லாரி மோதிய விபத்தில், பஸ்சில் பயணம் செய்த ஐஸ் ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்துவை போலீசார் கைது செய்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார்.

விபத்து தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே ஜஸ்கிரத் சிங் சித்துவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஜஸ்கிரத் சிங் சித்துவுக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சித்துவின் வக்கீல் கூறும்போது, இன்னும் பல சட்ட நடைமுறைகள் உள்ளது. நாடு கடத்தும் செயல்முறைக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம் என்றார்.

Tags:    

Similar News