உலகம்

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 பேர் உயிரிழப்பு

Published On 2025-05-11 15:46 IST   |   Update On 2025-05-11 15:46:00 IST
  • விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேரில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
  • விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை நுவரெலியா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது, மலைப் பகுதியான நுவரெலியா-கம்பளை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென மலையிலிருந்து 100 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விழுந்தது.

இதில் பயணிகள் பலர் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேரில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News