உலகம்

சீன கார் நிறுவனம் மீது பிரேசிலில் குற்றச்சாட்டு பதிவு

Published On 2025-05-29 05:06 IST   |   Update On 2025-05-29 05:06:00 IST
  • சீனாவின் மின்சார காரான ‘பைட்’ நிறுவன உற்பத்தி ஆலை பிரேசிலில் அமைந்துள்ளது.
  • இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

பிரேசிலியா:

சீனாவின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான 'பைட்' நிறுவன உற்பத்தி ஆலை பிரேசில் நாட்டின் சாவ் பவுலோ நகரில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புகளில் சீன அதிகாரிகள் மட்டுமே பதவி வகித்து வருகிறார்கள்.

இந்நிலையில், சீன கார் நிறுவனத்தின் மீது தொழிலாளர்கள் நலச்சங்கம் பிரேசிலியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் சீன நிறுவனம் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதாகவும், குறிப்பிட்ட பணி நேரத்தைவிட அதிக நேரம் பணிபுரிய கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சீன கார் நிறுவன வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைவில் விசாரிக்க உள்ளது. அந்த நிறுவனத்தை நாட்டில் இருந்து முழுவதுமாக அகற்ற அரசு வக்கீல்கள் நீதிபதிகளைக் கேட்டு கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News