உலகம்

சிலியின் சாண்டியாகோவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2023-03-31 02:27 IST   |   Update On 2023-04-10 14:48:00 IST
  • சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இது 6.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

சாண்டியாகோ:

பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கு மூலையில் அமைந்துள்ள சிலி நாடு புவியியல் அமைப்பின் படி அடிக்கடி நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் நெருப்பு வளையம் பகுதியில் உள்ளது.

இந்நிலையில், சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியால் அலறியபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர்.

சான்ட்டியாகோ நகரின் தென்மேற்கே சுமார் 328 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News