உலகம்

இஸ்ரேல், அமெரிக்கா-ஈரான் போர்: இரு தரப்புக்கும் ஐ.நா.சபை கண்டனம்

Published On 2026-03-01 14:53 IST   |   Update On 2026-03-01 14:53:00 IST
  • ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது.
  • வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டுவிட்டது.

இஸ்ரேல்-ஈரான் போர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்புக் கூட்டத்தில் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரஸ் பேசியதாவது:-

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சர்வதேச மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்ப்பதற்கு சாத்தியக் கூறுகளும் இல்லை.

இந்தத் தாக்குதலால், வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டுவிட்டது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து உடனடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்.

சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும், அணுசக்தி பாதுகாப்பு தீவிரமாவதைத் தடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News