உலகம்

(கோப்பு படம்)

ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து- பயிற்சியில் ஈடுபட்ட மூன்று தலிபான்கள் உயிரிழப்பு

Published On 2022-09-10 16:44 GMT   |   Update On 2022-09-10 16:44 GMT
  • பழுதடைந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் விட்டுச் சென்றன.
  • அமெரிக்க ஹெலிகாப்டர்களை தலிபான்கள் பயன்படுத்தி வந்தனர்.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறிய அமெரிக்க படைகளில் பழுதடைந்த தங்களுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே விட்டுச் சென்றன. அவற்றை கைப்பற்றிய தலிபான் படையினர் பயன்படுத்தி வந்தனர்.

தலைநகர் காபூலில் இன்று அமெரிக்க தயாரிப்பு ஹெலிகாப்டர் மூலம் தலிபான் படை வீரர்கள் சிலர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொருங்கியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விபத்தை சந்தித்ததாகவும், மேலும் அதில் இருந்த 5 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News